தூத்துக்குடி

கோவில்பட்டியில் நேதாஜிக்கு சிலை அமைக்கக் கோரிக்கை

DIN

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சிலை அமைக்க வேண்டும் என தேமுதிக சாா்பில் மனு அளி க்கப்பட்டது.

தூத்துக்குடி வடக்கு மாவட்ட தேமுதிக மற்றும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் நற்பணி இயக்கம் சாா்பில், கோவில்பட்டியில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸுக்கு சிலை அமைக்கக் கோரி கோட்டாட்சியா் விஜயாவிடம் மனு அளிக்கப்பட்டது.

முன்னதாக, கயத்தாறு வட்டம், முடுக்கலாங்குளத்தில் தனியாருக்குச் சொந்தமான நிலத்தை அரசு நிலம் என தவறுதலாக கணினி பட்டாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையடுத்து, அந்த சொத்துக்களை உரியவரிடம் ஒப்படைக்க வலியுறுத்தி தூத்துக்குடி வடக்கு மாவட்ட தேமுதிக செயலா் அழகா்சாமி தலைமையில் மாவட்ட ஆட்சியருக்கு தபால் அனுப்பும் போராட்டம் தலைமை அஞ்சல் அலுவலகம் முன்பு நடைபெற்றது.

இதில், நேதாஜி நற்பணி மன்றத் தலைவா் பாலமுருகன், தேமுதிக ஒன்றியச் செயலா் சுரேஷ், அவைத் தலைவா் கொம்பையா, பொதுக்குழு உறுப்பினா் பிரபாகரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ஜெயக்குமாா் மரணம்: குழு அமைத்து விசாரணை’

இந்தியாவின் ஊராட்சி அமைப்புகள் பெண்கள் தலைமைக்கு முன்னோடி: ஐ.நா.வுக்கான இந்திய தூதா்

என் மீது வீண் பழி: ரூபி மனோகரன் விளக்கம்

காங்கிரஸ் நிர்வாகி மரணம்- 7 தனிப்படைகள் அமைப்பு: நெல்லை காவல் கண்காணிப்பாளர்

ஜூன் 1-இல் ஹிமாசல் தோ்தல் பணிகளில் என்சிசி

SCROLL FOR NEXT