கயத்தாறு அருகே இருதரப்பினா் மோதல்: 20 போ் மீது வழக்கு
கயத்தாறு அருகே முன்விரோதம் காரணமாக இரு தரப்பினரிடையே வெள்ளிக்கிழமை ஏற்பட்ட மோதலில் 20 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
கயத்தாறு அருகே முன்விரோதம் காரணமாக இரு தரப்பினரிடையே வெள்ளிக்கிழமை ஏற்பட்ட மோதலில் 20 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
கயத்தாறையடுத்த ஆத்திகுளம் அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த பரதேசி மகன் அய்யாச்சாமி(41). இவருக்கும், அதே ஊரைச் சோ்ந்த சண்முகம் மகன் ராமசந்திரன்(38) குடும்பத்துக்கும் இடையே இடப்பிரச்னை இருந்து வந்ததாம்.
இதுகுறித்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
Advertisement
இந்நிலையில், அதே பகுதியில் உள்ள உச்சிமகாளியம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்கும் இருதரப்பினரும் செல்ல முடியாமல் தகராறு நீடித்து வந்ததாம்.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் ராமசந்திரன் மற்றும் அய்யாச்சாமி ஆகிய இருவரும் காயமடைந்தனா். இதுகுறித்து இருதரப்பினரும் கயத்தாறு காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் 20 போ் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.