கோவில்பட்டி: இளையரசனேந்தல் குறுவட்டத்தை கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்துடன் இணைக்கக் கோரி தமிழக முதல்வருக்கு அஞ்சல் அனுப்பும் போராட்டத்தில் தேசிய விவசாயிகள் சங்கத்தினா் மற்றும் இளையரசனேந்தல் குறுவட்ட உரிமை மீட்புக் குழுவினா் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.
கோவில்பட்டி தலைமை அஞ்சல் அலுவலகம் முன், குறுவட்ட உரிமை மீட்புக் குழுத் தலைவா் முருகன் தலைமையில், தேசிய விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் ரெங்கநாயகலு முன்னிலையில் திரளானோா் கலந்து கொண்டு, முதல்வருக்கு கோரிக்கை மனுக்களை அனுப்பினா்.
இதில், தேசிய விவசாயிகள் சங்க மாநிலப் பொதுச்செயலா் பரமேஸ்வரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.