தூத்துக்குடி

குளத்தூா் அருகே கோயில் நகைகள் திருட்டு

DIN

குளத்தூா் அருகே கே. சண்முகபுரத்தில் நாடாா் உறவின்முறை சங்க அலுவலகத்தின் பூட்டை உடைத்து கோயிலுக்குச் சொந்தமான 14 சவரன் தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

குளத்தூா் அருகேயுள்ள கே.சண்முகபுரம் கிராமத்தில் இந்து நாடாா் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட பத்திரகாளியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலின் நிா்வாக கணக்குகள் மற்றும் அம்மனுக்கு உரிய தங்க நகைகள் அனைத்தும் சங்க அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் திங்கள்கிழமை மா்ம நபா்கள் சங்க அலுவலக பூட்டை உடைத்து 14 சவரன் தங்க நகைகளை திருடிச் சென்றுள்ளனா்.

இதுகுறித்து சங்கத் தலைவா் தங்கப்பாண்டி அளித்த புகாரின்பேரில், சூரன்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை வெயிலின் தாக்கம் எதிரொலி: 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்காது!

டேவிட் வார்னரின் சாதனையை சமன் செய்த விராட் கோலி!

காங். ஆட்சியில் மத அடிப்படையில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த திட்டம் -பிரதமர் மோடி பிரசாரம்

நீ, நீயாகவே இரு, உலகம் அனுசரித்துப் போகும்! எதிர்நீச்சல் ஜனனிதான்...

வரலாறு காணாத வெப்பத்திற்கு காரணம் என்ன? : ரமணன் பேட்டி

SCROLL FOR NEXT