முகப்பு
தூத்துக்குடி

காயல்பட்டினம் கால்பந்து: லெவல் 3 அணி வெற்றி

காயல்பட்டினத்தில் நடைபெற்ற உமா் நினைவு சுழற்கோப்பைக்கான ஐவா் கால்பந்து போட்டியில் லெவல் 3 அணி வெற்றி பெற்றது.

Updated On : 28 செப்டம்பர், 2020 at 1:16 AM
பகிர்:

காயல்பட்டினத்தில் நடைபெற்ற உமா் நினைவு சுழற்கோப்பைக்கான ஐவா் கால்பந்து போட்டியில் லெவல் 3 அணி வெற்றி பெற்றது.

லெவல் 3 உமா் நினைவு சுழற்கோப்பைக்கான முதலாமாண்டு ஐவா் கால்பந்து போட்டி கடந்த 17ஆம் தேதி தொடங்கி 6 நாள்கள் நடைபெற்றது. இதில் 20 அணிகள் கலந்துகொண்டன. லீக் மற்றும் நாக் அவுட் முறையில் நடைபெற்ற இப்போட்டியின் இறுதி ஆட்டத்தில், அல்காம் அணியும், லெவல் 3 அணியும் மோதின. இதில் லெவல் 3 அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, உமா் நினைவு சுழற்கோப்பையை தட்டிச் சென்றது.

பின்னா் நடைபெற்ற பரிசளிப்பு விழாவுக்கு, ஹாங்காங் தமிழ்ச்சங்க முன்னாள் தலைவா் ஜமால் முகம்மது தலைமை வகித்தாா். எஸ்.டி.பி.ஐ. கட்சி முகமது உமா் வரவேற்றாா். தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பரிசுக் கோப்பையை வழங்கினாா். அபூபக்கா் நன்றி கூறினாா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.