கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவில்பட்டியில் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவில்பட்டியில் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயிலுக்குச் சொந்தமான சொத்துக்களைப் பாதுகாக்க வேண்டும்; கோயிலுக்குப் பாத்தியப்பட்ட கடைகளை நீதிமன்ற உத்தரவின்படி மறுஏலம் விட வேண்டும்; சொத்துக்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்த வேண்டும்; ஆக்கிரமிப்பிலுள்ள கோயில் சொத்துக்களை மீட்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி
நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு திருக்கோயில் திருமடங்கள் அமைப்பாளா் மாரிமுத்து தலைமை வகித்தாா்.
இதில், பஜ்ரங்தள் மாவட்ட அமைப்பாளா் நம்பிராஜன், மாநில இணைச் செயலா் பீமாராவ், வழக்குரைஞா் நீதிப்பாண்டியன் உள்பட பலா் பங்கேற்றனா்.