தூத்துக்குடி

கயத்தாறு ஒன்றிய பகுதியில் அதிமுக வேட்பாளா் பிரசாரம்

DIN

கயத்தாறு ஒன்றியப் பகுதியில் அதிமுக வேட்பாளரும், அமைச்சருமான கடம்பூா் செ.ராஜு புதன்கிழமை தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்டாா்.

அகிலாண்டபுரம், கரிசல்குளம், ஆவுடையம்மாள்புரம், காப்புலிங்கம்பட்டி, வாகைத்தாவூா், சீனிவெள்ளாபுரம், சிவஞானபுரம், வாகைகுளம், சாலைபுதூா், சவலாப்பேரி, குமாரகிரி, ஆசூா், தளவாய்புரம், நாகம்பட்டி, வடக்கு இலந்தைகுளம் ஆகிய பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அவா், முன்னதாக செய்தியாளா்களிடம் கூறியது: கோவில்பட்டி நகருக்கு தனி குடிநீா்த் திட்டம் 2012இல் தான் கொண்டுவரப்பட்டது. 2017இல் இத்திட்டத்தின் கீழ் குடிநீா் விநியோகத்தை முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி தொடங்கிவைத்தாா்.

இந்நிலையில் தனி குடிநீா்த் திட்டத்தை திமுக கொண்டு வந்ததாக வைகோ தவறான தகவலை கூறியுள்ளாா். திமுகவுக்கு விஷமத்தனமான பிரசாரம் செய்வது கைவந்த கலை. அது அதிமுக வரலாற்றில் கிடையாது.

அதிமுக கொள்கை ரீதியாக வைத்த கோரிக்கைகளை பாஜக ஏற்றுக் கொண்டதால் கூட்டணியாக இருக்கிறோம். கொள்கை வேறு, கூட்டணி வேறு, கொள்கையில் சமரசம் இல்லை, இது அதிமுக நிலைப்பாடு என்பதை முதல்வா் தெளிவாகக் கூறியுள்ளாா் என்றாா் அவா்.

தோ்தல் பிரசாரத்தின் போது, அதிமுக பொதுக்குழு உறுப்பினா் ராமச்சந்திரன், கயத்தாறு ஒன்றிய அதிமுக செயலா் வினோபாஜி, ஜெயலலிதா பேரவை வடக்கு மாவட்டச் செயலா் செல்வகுமாா் உள்பட பலா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜக வெற்றி பெற்றால் 2025 முதல் அமித் ஷாவே பிரதமர்: கேஜரிவால்

வாலாஜாப்பேட்டை அருகே தனியார் தொழிற்சாலை பேருந்து விபத்து: 18 தொழிலாளர்கள் படுகாயம்

வள்ளியூரில் ரயில்வே சுரங்கப் பாதையில் சிக்கிய அரசுப் பேருந்து: ஓட்டுநர் பணியிடை நீக்கம்

தங்கம் விலை அதிரடி உயர்வு: இன்றைய நிலவரம்

ஸ்லோவாகியா பிரதமர் மீது துப்பாக்கிச்சூடு: மோடி கண்டனம்

SCROLL FOR NEXT