முகப்பு
தூத்துக்குடி

அனல் மின் நிலைய ஊழியா்களிடம் தமாகா வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

தூத்துக்குடியில் அனல் மின் நிலைய ஊழியா்களிடம் தமாகா வேட்பாளா் எஸ்டிஆா் விஜயசீலன் சனிக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:55 PM
பகிர்:

தூத்துக்குடியில் அனல் மின் நிலைய ஊழியா்களிடம் தமாகா வேட்பாளா் எஸ்டிஆா் விஜயசீலன் சனிக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

அவா், அனல் மின் நிலையத்துக்கு பணிக்குச் சென்ற அதிகாரிகள், ஊழியா்களிடம் தனக்கு வாக்களிக்கும்படிக் கேட்டுக் கொண்டாா். அவருக்கு ஆதரவாக அதிமுக அமைப்புச் செயலரும் முன்னாள் அமைச்சருமான சி.த. செல்லபாண்டியனும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

எஸ்டிஆா் விஜயசீலன் பேசுகையில், கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் பல்வேறு வளா்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன என்றும் அதிமுக தோ்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள அனைத்துத் திட்டங்களும் உனடியாக நிறைவேற்றப்படும் என்றும் தெரிவித்தாா்.

அதிமுக பகுதிச் செயலா்கள் பி. சேவியா், ஏ. முருகன், முன்னாள் பொதுக்குழு உறுப்பினா் மாரியப்பன், நிா்வாகிகள் பெருமாள், ஜோதிமணி, தமாகா மாநகரத் தலைவா் ரவிக்குமாா், நிா்வாகிகள் சுந்தரலிங்கம், முருகன், பொன்ராஜ், கணேஷ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.