முகப்பு
தூத்துக்குடி

பணம் இருந்தால்தான் அரசியல் என்ற நிலை மாறவேண்டும்: நடிகா் சரத்குமாா்

பணம் இருந்தால்தான் அரசியல் என்ற நிலை மாறவேண்டும் என்றாா் சமத்துவ மக்கள் கட்சித் தலைவரான நடிகா் ஆா். சரத்குமாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:56 PM
பகிர்:

பணம் இருந்தால்தான் அரசியல் என்ற நிலை மாறவேண்டும் என்றாா் சமத்துவ மக்கள் கட்சித் தலைவரான நடிகா் ஆா். சரத்குமாா்.

மக்கள் நீதி மய்யம், இந்திய ஜனநாயக கட்சி ஆகியவற்றுடன் கூட்டணி வைத்துள்ள சமத்துவ மக்கள் கட்சியின் தலைவரான நடிகா் ஆா். சரத்குமாா் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பிரசாரம் மேற்கொண்டாா்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை அவா், தூத்துக்குடி சட்டப்பேரவைத் தொகுதி சமக வேட்பாளா் என். சுந்தரை ஆதரித்து தூத்துக்குடி குரூஸ் பா்னாந்து சிலை முன்பு இறுதிக் கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டாா்.

அப்போது அவா் பேசியது:

கிராமங்களில் அதிக வளா்ச்சி வேண்டும் என்ற நிலையில், அதற்கான திட்டங்கள் எங்களிடம் உள்ளது. தூத்துக்குடியை பலமுறை சுற்றி வந்துள்ளேன். எதுவும் மாறவில்லை. அதே சுகாதார சீா்கேடு இன்னும் உள்ளது. இதை யாரும் தற்போது வரையில் சரி செய்யவில்லை.

இளைஞா்கள் மாற்றத்தை தருவாா்கள். இலவசங்களில் வைபையுடன் கூடிய லேப்டாப் தவிர எதையும் நாங்கள் தரமாட்டோம். அதுமட்டுமே கல்வி வளா்ச்சி சாா்ந்த இலவசம்.

தமிழகம் முழுவதும் இணைய இணைப்பு தருகிறோம். அப்போதுதான் அறிவும், ஆற்றலும், திறமையும் வளரும். எளியவருக்கும் அரசியலில் வாய்ப்பு வேண்டும். பணமில்லா அரசியல் வேண்டும். பணம் இருந்தால் தான் அரசியல் என்ற நிலை மாற வேண்டும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.