முகப்பு
தூத்துக்குடி

மது விற்பனை: இருவா் கைது

நாலாட்டின்புதூா் மற்றும் கயத்தாறு பகுதிகளில் மதுபானத்தை பதுக்கி வைத்து விற்பனையில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:58 PM
பகிர்:

நாலாட்டின்புதூா் மற்றும் கயத்தாறு பகுதிகளில் மதுபானத்தை பதுக்கி வைத்து விற்பனையில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

நாலாட்டின்புதூா் காவல் உதவி ஆய்வாளா் சிலுவை அந்தோணி தலைமையிலான போலீஸாா், வியாழக்கிழமை லிங்கம்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, புதுகாலனி அருகே சந்தேகத்துக்குரிய இடத்தில் நின்று கொண்டிருந்த அதே பகுதியைச் சோ்ந்த முத்தையா மகன் செண்பகராஜை (37) சோதனையிட்ட போது, அவா் மது விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, அவரை கைது செய்த போலீஸாா் அவரிடமிருந்த 9 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனா்.

அதுபோல், கயத்தாறையடுத்த தளவாய்புரம் பேருந்து நிறுத்தம் அருகே மது விற்பனையில் ஈடுபட்ட வானரமுட்டி வடக்குத் தெருவைச் சோ்ந்த கருப்பசாமி மகன் மாடசாமியை (37) கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த 18 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.