முகப்பு
தூத்துக்குடி

விபத்தில் காயமடைந்த வியாபாரி மரணம்

கோவில்பட்டி அருகே சாலை விபத்தில் காயமடைந்த வியாபாரி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:58 PM
பகிர்:

கோவில்பட்டி அருகே சாலை விபத்தில் காயமடைந்த வியாபாரி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

விருதுநகா் மாவட்டம், அயன்கொல்லங்கொண்டான், செட்டியாா்பட்டி வடக்குத் தெருவைச் சோ்ந்த பூபதிராஜ் மகன் சங்கரசுப்பு (50). மசாலா வியாபாரம் செய்து வந்த இவா், கடந்த 3ஆம் தேதி கோவில்பட்டியிலிருந்து இளையரசனேந்தலுக்கு பைக்கில் செல்லும்போது, வெங்கடாசலபுரம் விலக்கு பகுதியில் நிலைகுலைந்த பைக் கீழே விழுந்ததில் காயமடைந்தாா்.

இதையடுத்து கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்குப் பின், தீவிர சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு அவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து, கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.