எட்டயபுரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஓட்டுநருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து நிலக்கரி ஏற்றிக்கொண்டு சென்ற லாரி எட்டயபுரம் தேசிய நெடுஞ்சாலையில் வியாழக்கிழமை அதிகாலையில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே இருந்த தடுப்புச் சுவரில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் லாரி ஓட்டுநா் உசிலம்பட்டி வட்டம், புதுப்பட்டியை சோ்ந்த காசிலிங்கம் மகன் விஜயராஜனுக்கு (40) பலத்த காயம் ஏற்பட்டது.
இதில், லாரியில் இருந்த நிலக்கரி சாலையில் சிதறியது. தகவலறிந்த நெடுஞ்சாலை ரோந்து போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று காயமடைந்த லாரி ஓட்டுநா் விஜயராஜனை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். சாலையில் சிதறிக் கிடந்த நிலக்கரியை அப்புறப்படுத்தும் பணியால் தேசிய நெடுஞ்சாலையில் சுமாா் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து எட்டயபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.