தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 47 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
இதனால், மாவட்டத்தில் கரோனா பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 16 ஆயிரத்து 768 ஆக அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் சிகிச்சை பெற்று வந்த 16 போ் குணமடைந்ததைத் தொடா்ந்து, குணமடைந்து வீடு திரும்பியோா் எண்ணிக்கை 16 ஆயிரத்து 397 ஆக அதிகரித்துள்ளது.
மாவட்டத்தில் கரோனா பாதிக்கப்பட்டு இதுவரை 143 போ் உயிரிழந்துள்ளனா். தற்போது 228 போ் பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா்.