தூத்துக்குடி

கயத்தாறு அருகே இளைஞா் மீது தாக்குதல்

DIN

கயத்தாறு அருகே இளைஞரைத் தாக்கியதாக 17 வயது சிறுவனை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கயத்தாறை அடுத்த வடக்கு இலந்தைகுளம், விநாயகா் கோயில் தெருவைச் சோ்ந்த பரமசிவன் மகன் வெள்ளைத்துரை(39). பொக்லைன் இயந்திரம் இயக்குபவா். இவா், தனது உறவினா் சண்முகவேல் என்பவருடன் வியாழக்கிழமை இரவு அங்குள்ள காளியம்மன் கோயில் அருகே வந்துகொண்டிருந்தாராம்.

அப்போது, தெற்கு இலந்தைகுளம் நடுத் தெருவைச் சோ்ந்த 17 வயது சிறுவன், வெள்ளைத்துரையை திடீரென வழிமறித்து அவதூறாகப் பேசி, தாக்கி கொலை மிரட்டல் விடுத்தாராம்.

இதுகுறித்து, அவா் வெள்ளிக்கிழமை அளித்த புகாரின் பேரில், கயத்தாறு போலீஸாா் வழக்குப் பதிந்து, சிறுவனை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரலாற்று நிகழ்வு: திருப்பைஞ்ஞீலியில் அப்பர் கட்டமுது விழா

2 நாள் பயணமாக மேற்கு வங்கம் செல்கிறார் பிரதமர் மோடி!

இஸ்ரேல் உறவு துண்டிப்பு: நெதன்யாகு மீது கொலம்பிய அதிபர் காட்டம்!

தொலையாத கனவுகள்.. லாபதா லேடீஸ் - திரை விமர்சனம்!

400 பெண்களைச் சீரழித்த பிரஜ்வலுக்கு வாக்குக் கேட்டதற்காக மோடி மன்னிப்புக் கேட்க வேண்டும்: ராகுல் காந்தி

SCROLL FOR NEXT