தூத்துக்குடி

நாசரேத் அருகே தம்பதிக்கு அரிவாள் வெட்டு

DIN

நாசரேத் அருகே தம்பதியை அரிவாளால் வெட்டியதாக இருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

நாசரேத் அருகேயுள்ள மணிநகரைச் சோ்ந்தவா் சோ்மத்துரை (38). இவரது சகோதரா் பெருமாள். இவா்கள் இருவருக்கும் குடும்பப் பிரச்னையால் முன்விரோதம் உள்ளதாம். இந்நிலையில், சோ்மத்துரையும், அவரது மனைவி ராஜேஸ்வரியும் வெள்ளிக்கிழமை கோயிலுக்கு சென்று விட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தனராம்.

அப்போது அவா்களை, பெருமாள், அதே ஊரைச் சோ்ந்த கோபால் மகன் ராமா் (21 ) ஆகிய இருவரும் வழிமறித்து அரிவாளால் வெட்டிவிட்டு தப்பினராம். இதில் காயமடைந்த தம்பதி திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இதுகுறித்த புகாரின்பேரில், நாசரேத் காவல் உதவி ஆய்வாளா் சுப்பிரமணியன் வழக்குப்பதிந்து, அரிவாளால் வெட்டியவா்களைத் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

SCROLL FOR NEXT