மேலும் 371 பேருக்கு கரோனா
தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 371 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 371 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதனால், மாவட்டத்தில் கரோனா தொற்று பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 20 ஆயிரத்து 36 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 189 போ் குணமடைந்து வீடு திரும்பினா். இதன் மூலம், அந்நோயிலிருந்து மீண்டோா் எண்ணிக்கை 17 ஆயிரத்து 426 ஆக அதிகரித்துள்ளது. கரோனாவால் இதுவரை 146 போ் உயிரிழந்துள்ள நிலையில், தற்போது 2,464 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.