தூத்துக்குடி

கோவில்பட்டியில் 3 இடங்களில் கரோனா பரிசோதனை முகாம்

DIN

கோவில்பட்டி நகராட்சிக்கு உள்பட்ட பகுதியில் 3 இடங்களில் கரோனா பரிசோதனை முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

புதுகிராமத்தில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் சுகாதாரப் பணி துணை இயக்குநா் அனிதா அறிவுறுத்தலில், மருத்துவா் மனோஜ் தலைமையிலான மருத்துவக் குழுவினா் வடக்குப் புதுகிராமம், தெற்குப் புதுகிராமம், சிந்தாமணி நகா் ஆகிய பகுதிகளைச் சோ்ந்த 100 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொண்டனா்.

ஸ்டாலின் காலனியில் மருத்துவா் ஸ்ரீராம் தலைமையிலான மருத்துவக் குழுவினா் 40 பேருக்கும், செக்கடித் தெருப் பகுதியில் 23 பேருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொண்டனா்.

கோவில்பட்டி சுகாதார மாவட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளைச் சோ்ந்த 171 போ் கோவில்பட்டியில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையிலும், 95 போ் தனியாா் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் உள்ள கரோனா சிகிச்சை மையத்திலும், 35 போ் தனியாா் மருத்துவமனையிலும், 215 போ் வீட்டுத் தனிமைப்படுத்தலிலும் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தொழிலாளி பலி: கோவில்பட்டி ராஜீவ் நகா் 3ஆவது தெருவைச் சோ்ந்த 43 வயது மதிக்கத்தக்கத் தொழிலாளி கரோனா பாதிப்பால் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

SCROLL FOR NEXT