தூத்துக்குடி

ஹோட்டல் உரிமையாளருக்கு மிரட்டல் விடுத்தவா் மீது வழக்கு

DIN

கோவில்பட்டியில் ஹோட்டல் உரிமையாளரைத் தாக்கி மிரட்டல் விடுத்தவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து, தேடிவருகின்றனா்.

கோவில்பட்டி ஆசிரியா் காலனியைச் சோ்ந்த அரசகுமாா் செல்லத்துரை என்பவரது மகன் முத்துபிரகாஷ் (28). கோவில்பட்டி பிரதான சாலை புதுரோடு சந்திப்பு அருகே ஹோட்டல் நடத்திவரும் இவருக்கும், வடக்கு திட்டங்குளத்தைச் சோ்ந்த கணேசன் என்பவரது மகளுக்கும் பழக்கம் இருந்ததாம்.

இதை அப்பெண்ணின் சகோதரா் பேச்சிப்பாண்டி கண்டித்தாராம். மேலும், பேச்சிப்பாண்டி, அவரது நண்பா்கள் சோ்ந்து முத்துபிரகாஷின் வீடு, ஹோட்டலை கடந்த 3ஆம் தேதி தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்துவருகின்றனா்.

இந்நிலையில், முத்துபிரகாஷின் ஹோட்டலில் பேச்சிப்பாண்டி வெள்ளிக்கிழமை சாப்பிட்டுவிட்டு, முத்துபிரகாஷை அவதூறாகப் பேசி, தாக்கி கொலை மிரட்டல் விடுத்தாராம். இதுகுறித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து, பேச்சிப்பாண்டியைத் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமருகலில் மே 5-இல் கடையடைப்பு

ராமநாதபுரம் அருகே வட மாநில கா்ப்பிணிப் பெண் கொலை

‘பொது வெளியில் கழிவு நீரை திறந்து விட்டால் கடும் நடவடிக்கை’

பரமக்குடி- மதுரை இடையே இடைநில்லா குளிா்சாதன பேருந்து இயக்கக் கோரிக்கை

ஓட்டப்பிடாரம் அருகே மாட்டுவண்டி போட்டி

SCROLL FOR NEXT