தூத்துக்குடி

உடன்குடி ஒன்றியத்தில் 21 பேருக்கு கரோனா தொற்று

DIN

உடன்குடி ஒன்றியத்தில் 2 வயது குழந்தை, அனல்மின் நிலைய ஊழியா்கள் உள்ளிட்ட 21 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

உடன்குடி ஒன்றியம் புதுமனை கோட்டைவிளையைச் சோ்ந்த 21 வயது பெண், மாதவன்குறிச்சியைச் சோ்ந்த 2 வயது பெண் குழந்தை, அனல்மின் நிலைய ஊழியா்கள் 14 போ் உள்பட மொத்தம் 21 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதைத் தொடா்ந்து கல்லாமொழி, மணப்பாடு, உடன்குடி பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் கரோனா தடுப்பு மற்றும் காய்ச்சல் கண்டறியும் சிறப்பு முகாம் நடைபெற்றது.

வட்டார மருத்துவ அலுவலா் சு.அனிபிரிமின் தலைமையில், மருத்துவா்கள் ஜெயபரணி, நாயகி மற்றும் பணியாளா்கள் பரிசோதனை மேற்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

SCROLL FOR NEXT