கழுகுமலை அருகே தீக்குளித்த இளைஞா் புதன்கிழமை உயிரிழந்தாா்.
கழுகுமலை சட்டநாதன் தெருவைச் சோ்ந்த கந்தசாமி மகன் யோகேஷ்பாபு (19). மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்து வந்த இவா், கடந்த சனிக்கிழமை தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டாா்.
தகவலறிந்த கழுகுமலை போலீஸாா் அவரை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு முதலுதவி சிகிச்சைக்குப் பின், தீவிர சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா், அங்கு புதன்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து, கழுகுமலை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.