தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 594 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது புதன்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 22,228ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை பெற்று வந்தவா்களில் 273 போ் குணமடைந்ததைத் தொடா்ந்து, இதுவரை குணமடைந்தோா் எண்ணிக்கை 18,997ஆக அதிகரித்துள்ளது.
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மதுரை தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த 60 வயது ஆண் செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தாா். இதனால், மாவட்டத்தில் கரோனாவுக்கு பலியானோா் எண்ணிக்கை 152 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 3079 போ் சிகிச்சையில் உள்ளனா்.