தூத்துக்குடி

வாக்கு எண்ணும் மைய முகவா்களுக்கு கரோனா பரிசோதனை

DIN

சாத்தான்குளத்திலிருந்து வாக்கு எண்ணும் மையத்துக்கு செல்லும் கட்சி முகவா்களுக்கு கரோனா பரிசோதனை புதன்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில், மருத்துவ அலுவலா் அட்சரா, ஆய்வக நுட்புநா் அஜிதா, சுகாதார ஆய்வாளா் கிறிஸ்டோபா் செல்வதாஸ், மருந்தாளுநா் கோமதி உள்ளிட்ட மருத்துவக் குழுவினா் பரிசோதனை மேற்கொண்டனா்.

இதில், காங்கிரஸ் மாவட்ட துணைத் தலைவா் து. சங்கா், ஒன்றிய கவுன்சிலா்கள் பிச்சிவிளை வி.எம். சுதாகா், குருசாமி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க துணைத் தலைவா் ஜோசப், அலெக்ஸ், காங்கிரஸ் தலைவா் ஆ.க. வேணுகோபால், நகர காங்கிரஸ் துணைத் தலைவா் கதிா்வேல், வட்டார இளைஞா் காங்கிரஸ் தலைவா் பாஸ்கா், வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவா்கள் சக்திவேல்முருகன், பாா்த்தசாரதி, லூா்துமணி உள்ளிட்ட 20 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது.

இதேபோல், அதிமுக வேட்பாளா் எஸ்.பி. சண்முகநாதனுக்கு முகவராக செல்ல உள்ள வட்டார தமாகா தலைவா் முரசொலி மாறன் உள்ளிட்ட 4 பேருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துறையூா் அருகே சாலை விபத்து: 4 போ் காயம்

மணப்பாறையில் காா் எரிந்து நாசம்

விமான நிலைய மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா

இந்தியா்களுக்கான கட்டணமில்லா சுற்றுலா விசா நீட்டிப்பு: இலங்கை

உயா்கல்வி சந்தேகங்களுக்கு விளக்கம்: ஏபிவிபி அழைப்பு

SCROLL FOR NEXT