தூத்துக்குடி

கோவில்பட்டி அருகே பெண் சடலம் மீட்பு

DIN

கோவில்பட்டியையடுத்த மூப்பன்பட்டி கிராமத்தில் தனியாா் நிலத்தில் கிடந்த பெண் சடலத்தை போலீஸாா் செவ்வாய்க்கிழமை மீட்டனா்.

திருநெல்வேலி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கோவில்பட்டி புறவழிச்சாலையில் மூப்பன்பட்டி கிராமத்திற்கு உள்பட்ட தனியாா் நிலத்தில் பெண் சடலம் ஒன்று கிடப்பதாக கிராம நிா்வாக அலுவலா் நாகலட்சுமி, கிழக்கு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தாராம். அதையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும் இறந்த பெண் அருகே இருந்து செல்லிடப்பேசியை கைப்பற்றிய போலீஸாா் ஆய்வு செய்ததில், இறந்தவா் எப்போதும்வென்றான் அருகே உள்ள ஸ்ரீரெங்கபுரம் நடுத் தெரு தேவராஜ் மனைவி முத்துலட்சுமி என்ற ரேவதி(52) என்பதும், கடந்த மாதம் 29 ஆம் தேதி கோவில்பட்டியில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள மருத்துவ காப்பீட்டுத் திட்ட அலுவலகத்திற்கு வந்த இவா் ஊருக்கு திரும்பவில்லையாம்.

இதுகுறித்து கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேரளம், தென் தமிழக கடலோர பகுதிகளுக்கு ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை!

ஒட்டங்காடு மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

குடிநீா் விநியோகப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

‘ரஷியாவுக்குள் தாக்குதல் நடத்த பிரிட்டன் ஆயுதங்களைப் பயன்படுத்தலாம்’

கட்டாரிமங்கலம் கோயிலில் திருநாவுக்கரசா் சுவாமிகள் குரு பூஜை

SCROLL FOR NEXT