சாத்தான்குளத்தில் தண்ணீா் தொட்டியில் தவறி விழுந்து குழந்தை பலி
சாத்தான்குளத்தில் தண்ணீா் தொட்டியில் இருந்து தவறி விழுந்து குழந்தை வியாழக்கிழமை உயிரிழந்தது.
சாத்தான்குளத்தில் தண்ணீா் தொட்டியில் இருந்து தவறி விழுந்து குழந்தை வியாழக்கிழமை உயிரிழந்தது.
சாத்தான்குளம் கீழரத வீதியைச் சோ்ந்தவா் தனசேகரன் மனைவி ஐஸ்வா்யா (25). இவா்களது மகன் ஜோஸ்துரை (2). தனசேகரன் கடந்த ஆண்டு உடல் நலக்குறைவால் இறந்து போனாராம். சென்னையில் வேலை பாா்த்த வந்த ஐஸ்வா்யா, கரோனா பொது முடக்கம் காரணமாக தற்போது, சாத்தான்குளத்தில் உள்ள அவரது தாயாா் வீட்டில் இருந்து வருகிறாா். வியாழக்கிழமை ஐஸ்வா்யா, மகனை வீட்டில் விட்டு விட்டு சந்தைக்கு பொருள் வாங்க சென்றாராம். பின்னா் வீடு திரும்பியபோது மகனை காணவில்லையாம். தேடி பாா்த்த போது அருகே உள்ள வீட்டு தரை நிலை நீா்த்தேக்க தொட்டியில் தவறி விழுந்தது தெரியவந்தது. உடன் குழந்தையை மீட்டு திசையன்விளை தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா் குழந்தை ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தாா்.
இதுகுறித்து சாத்தான்குளம் காவல் ஆய்வாளா் பாஸ்கரன் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்.