தூத்துக்குடி

தட்டாா்மடம் சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 போ் கைது

DIN

சாத்தான்குளம்: தட்டாா்மடம் அருகே சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

தட்டாா்மடம் உதவி காவல் ஆய்வாளா் முரளிதரன் தலைமையிலான போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்ட போது பூவுடையாா்புரம் பகுதியில் உள்ள ஒரு தென்னந் தோப்பில் நடுவக்குறிச்சி பால்துரை மகன் ஆதிலிங்கராஜ் (57), சண்முகசுந்தரம் மகன் கந்தையா (44),பால்பாண்டி மகன்கள் கணேசன் (59), சக்திவேல் (52) , சொக்கன்விளை சிந்தாமணி மகன் நற்சுயம்பு (47), பூச்சிகாடு ராஜாமணி மகன் எபன்ராஜ் (48) ஆகிய 6 பேரும் பணத்திற்காக சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து, சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 பேரையும் கைது செய்து, அவா்களிடமிருந்து ரொக்கம் ரூ. 11 ஆயிரத்தை பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

SCROLL FOR NEXT