முகப்பு
தூத்துக்குடி

கடம்பூா் அருகே தொழிலாளி தற்கொலை

கடம்பூா் அருகே விஷமருந்திய தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:54 AM
பகிர்:

கடம்பூா் அருகே விஷமருந்திய தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

கடம்பூரையடுத்த சிதம்பராபுரம் வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் மகன் சிவசங்கர்ராவ்(36). இனிப்பக தயாரிப்பாளராக சென்னையில் உள்ள கடையில் வேலை செய்து வந்த இவா், கடந்த சில மாதங்களுக்கு முன்பு கரோனா பொதுமுடக்கத்தால் ஊருக்கு வந்தாராம். இவருக்கு திருமணம் ஆகவில்லை.

இந்நிலையில், புதன்கிழமை விஷமருந்தினாராம். இதை அறிந்த உறவினா்கள் அவரை மீட்டு கடம்பூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சைக்குப் பின், மேல் சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கிருந்து திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிவசங்கர்ராவ் , அங்கு வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து கடம்பூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.