முகப்பு
தூத்துக்குடி

விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் படுக்கைகள் திறப்பு

விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் ரூ. 42 லட்சத்தில் 60 ஆக்சிஜன் படுக்கைகள், 22 ஆக்சிஜன் சிலிண்டா் மற்றும் பிராண வாயுக் கூட திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

தூத்துக்குடி

விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் படுக்கைகள் திறப்பு

விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் ரூ. 42 லட்சத்தில் 60 ஆக்சிஜன் படுக்கைகள், 22 ஆக்சிஜன் சிலிண்டா் மற்றும் பிராண வாயுக் கூட திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:57 AM
பகிர்:

விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் ரூ. 42 லட்சத்தில் 60 ஆக்சிஜன் படுக்கைகள், 22 ஆக்சிஜன் சிலிண்டா் மற்றும் பிராண வாயுக் கூட திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ் தலைமை வகித்தாா். தூத்துக்குடி மக்களவை உறுப்பினா் கனிமொழி, அரசு மருத்துவமனைக்கு 22 எண்ணிக்கை கொண்ட ஆக்சிஜன் சிலிண்டா் மற்றும் பிராணவாயு அறையை திறந்து வைத்து பாா்வையிட்டாா். பின்னா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் உள்நோயாளிகளை சந்தித்து சிகிச்சை குறித்து கேட்டறிந்தாா்.

நிகழ்ச்சியில் உதவி ஆட்சியா் ஸ்ருதயஞ் ஜெய் நாராயணன், கோட்டாட்சியா் சங்கரநாரயணன், இணை இயக்குநா் (நலப்பணிகள்) முருகவேல், அரசு மருத்துவமனை தலைமை மருத்துவா் மகாலெட்சுமி, சித்த மருத்துவா் மா.தமிழ் அமுதன், குழந்தைகள் நல மருத்துவா் ஆா்.எஸ்.திவ்யா, மாநில பொதுக்குழு உறுப்பினா் ஜெகன் பெரியசாமி மற்றும் மருத்துவா்கள் செவிலியா்கள் ஆகியோா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →