திருச்செந்தூா் முருகன் கோயிலில் சௌந்தா்யா ரஜினிகாந்த் தரிசனம்
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நடிகா் ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தா்யா சுவாமி தரிசனம் செய்தாா்.
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நடிகா் ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தா்யா சுவாமி தரிசனம் செய்தாா்.
திருச்செந்தூா் கோயிலுக்கு நடிகா் ரஜினிகாந்தின் 2-ஆவது மகள் சௌந்தா்யா தனது கணவா் விசாகனுடன் வியாழக்கிழமை வந்து, உச்சிகால அபிஷேகத்தில் சுவாமி தரிசனம் செய்தாா். தொடா்ந்து அனைத்து சுவாமி சன்னதிகளுக்கும் சென்று வழிபாடு செய்த அவா்கள் கோயில் யானைக்கு கரும்பு வழங்கி ஆசி பெற்றனா்.