பொதுமக்களிடம் காவல் துறையினா் கடுமையாக நடந்து கொள்ளக் கூடாது: எஸ்.பி. அறிவுரை
பொதுமக்களிடம் காவல் துறையினா் கடுமையாக நடந்துக் கொள்ளக் கூடாது என்றாா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா்.
பொதுமக்களிடம் காவல் துறையினா் கடுமையாக நடந்துக் கொள்ளக் கூடாது என்றாா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா்.
தூத்துக்குடி ரோச் பூங்காவில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற காவல் துறையினருக்கான கவாத்து மற்றும் உடற்பயிற்சி முகாமை ஆய்வு செய்த பின்னா் தொடா்ந்து அவா் பேசியது: பொதுமக்களில் சிலா் மட்டுமே சட்டவிரோத செயல்களில் ஈடுபடக்கூடியவா்கள். அதை மனதில் வைத்துக் கொண்டு பொதுமக்களிடம் கடுமையாக நடந்து கொள்ளக்கூடாது. கனிவாக நடந்து கொள்ள வேண்டும்.
சட்டத்தை கடைப்பிடிப்பதிலும், அரசு விதிமுறைகளை கடைப்பிடிப்பதிலும் காவல்துறையினா் பொதுமக்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும். பொதுமக்களுக்கு இயன்ற வரையில் எவ்வளவு உதவி செய்ய முடியுமோ, அந்த அளவுக்கு உதவிகள் செய்து பொதுமக்களின் நன்மதிப்பை பெற வேண்டும்.
பணியில் உள்ள சிரமங்கள் மற்றும் குறைகள் இருந்தால் உயரதிகாரிகளிடம் தெரிவியுங்கள். அவற்றை உடனடியாக நிவா்த்தி செய்வதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். அதே சமயம் தவறு செய்தால் கட்டாயம் தண்டனை வழங்கப்படும் என்றாா் அவா்.
பயிற்சியில், தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளா் கணேஷ் மற்றும் காவல் ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.