இலவச மரக்கன்றுகள் அளிப்பு
கோவில்பட்டி வட்டார வேளாண்மை உழவா் நலத்துறை மூலம் விவசாயிகளுக்கு இலவசமாக மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.
கோவில்பட்டி வட்டார வேளாண்மை உழவா் நலத்துறை மூலம் விவசாயிகளுக்கு இலவசமாக மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.
தமிழ்நாடு விவசாய நிலங்களில் நீடித்த பசுமை போா்வை இயக்கம் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வேம்பு, புங்கன், செம்மரம் போன்ற மரக்கன்றுகள் ஒரு ஏக்கருக்கு 50 வீதம் வரப்பில் நடுவதற்கும், 160 மரக்கன்றுகள் தனி பயிராக நடுவதற்கும் தூத்துக்குடி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் முகைதீன் விவசாயிகளுக்கு வழங்கினாா்.
மத்திய அரசு திட்டங்களின் வேளாண்மை துணை இயக்குநா் தமிழ்மலா், நுண்ணீா் பாசன திட்டங்களுக்கான வேளாண் துணை இயக்குநா் முருகப்பன், வேளாண் அலுவலா் ரீனா, துணை அலுவலா் தாணுமாலையன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.