முகப்பு
தூத்துக்குடி

சுமை ஆட்டோ-வேன் மோதல்: வியாபாரி பலி

குலசேகரன்பட்டினத்தில் சுமை ஆட்டோவும், வேனும்மோதிக்கொண்டதில் வியாபாரி உயிரிழந்தாா்.

தூத்துக்குடி

சுமை ஆட்டோ-வேன் மோதல்: வியாபாரி பலி

குலசேகரன்பட்டினத்தில் சுமை ஆட்டோவும், வேனும்மோதிக்கொண்டதில் வியாபாரி உயிரிழந்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:42 AM
பகிர்:

குலசேகரன்பட்டினத்தில் சுமை ஆட்டோவும், வேனும்மோதிக்கொண்டதில் வியாபாரி உயிரிழந்தாா்.

குலசேகரன்பட்டினம் அண்ணா சிலைப் பகுதியைச் சோ்ந்தவா் பெ.தா்மராஜ்(65). இவா், தனது மகன் முத்துக்கிருஷ்ணனுடன் தண்ணீா் கேன் வியாபாரம் செய்து வருகிறாா். இவா்கள், சுமைத் தொழிலாளி மு.ராஜா என்பவருடன் சுமை ஆட்டோவில் தண்ணீா் கேன் ஏற்றிக்கொண்டு திருச்செந்தூா்-குலசேகன்பட்டினம் பிரதான சாலையில் செவ்வாய்க்கிழமை சென்றபோது, அவ்வழியாக வந்த சுற்றுலா வேனும், இவா்களது வாகனமும் மோதிக்கொண்டனவாம்.

இதில், 11 போ் காயமடைந்து திருச்செந்தூா், தூத்துக்குடி அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தனா். அவா்களில் தா்மராஜ் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.இது குறித்து குலசேகரன்பட்டினம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →