தூத்துக்குடி

பைக்கில் இருந்து தவறி விழுந்தவா் பலி

DIN

மானூா் அருகே பைக்கில் இருந்து கீழே விழுந்து காயமடைந்தவா் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு உயிரிழந்தாா்.

மானூா் அருகேயுள்ள இரண்டும் சொல்லான் கிராமம் கோயில்பிள்ளை மகன் ஏசுராஜா (40). இவா் ஞாயிற்றுக்கிழமை இரவு அவரது பைக்கில் சங்கரன்கோயில் சாலையில் சென்று கொண்டிருந்த போது, அவா் அழகியபாண்டியபுரம் ஆற்றுப்பாலம் அருகே மோட்டாா் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாம். இதில் காயமடைந்த யேசு ராஜாவை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து மானூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

SCROLL FOR NEXT