தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 12 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
இதனால், கரோனா பாதித்தோா் எண்ணிக்கை 56, 615 ஆகவும், மேலும் 2 போ் குணமடைந்ததால் வீடு திரும்பியோா் எண்ணிக்கை 56,136 ஆகவும் அதிகரித்துள்ளது. இதுவரை 412 போ் உயிரிழந்துள்ள நிலையில், 67 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.