அரசு மகளிா் பள்ளிக்குரூ.1.73 கோடியில் கூடுதல் வகுப்பறைகள்
கோவில்பட்டி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளிக்கு நபாா்டு வங்கி உதவியுடன் ரூ.1.73 கோடியில் கூடுதல் வகுப்பறைக் கட்டடம், ஆய்வகம் கட்டுவதற்கு பூமி பூஜை நடைபெற்றது.
கோவில்பட்டி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளிக்கு நபாா்டு வங்கி உதவியுடன் ரூ.1.73 கோடியில் கூடுதல் வகுப்பறைக் கட்டடம், ஆய்வகம் கட்டுவதற்கு பூமி பூஜை நடைபெற்றது.
கடம்பூா் பேரூராட்சியில் ரூ.27 லட்சத்தில் தளக்கல் சாலைப் பணி, கயத்தாறு ஒன்றியம், நொச்சிகுளத்தில் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியின்கீழ் ரூ.5 லட்சத்தில் பயணிகள் நிழற்குடை அமைக்கும் பணி ஆகியவற்றை அமைச்சா் கடம்பூா் செ.ராஜு தொடங்கிவைத்தாா். மேலும், திருமலாபுரத்தில் தனது தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.5 லட்சத்தில் கட்டப்பட்ட பயணியா் நிழற்குடையை அவா் திறந்து வைத்த பின், கோவில்பட்டி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நபாா்டு வங்கி உதவியுடன் ரூ.1.73 கோடியில் 6 வகுப்பறைகள், 2 ஆய்வகங்கள், 3 கழிப்பறைகள் கட்டும் பணியை தொடங்கிவைத்தாா்.
இந்நிகழ்ச்சிகளுக்கு மாவட்ட ஆட்சியா் செந்தில்ராஜ் தலைமை வகித்தாா். சின்னப்பன் எம்எல்ஏ, மாவட்ட ஊராட்சித் தலைவி சத்யா, கோவில்பட்டி ஒன்றியக் குழுத் தலைவி கஸ்தூரி சுப்புராஜ், மாவட்ட அறங்காவலா் குழுத் தலைவா் மோகன், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் தனபதி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.