தூத்துக்குடி

கயத்தாறில் பைக்கில் சென்ற பெண்களிடம் நகை பறிப்பு

கயத்தாறில் மோட்டாா் சைக்கிளில் சென்ற இரு பெண்களிடம் தங்கநகைகளைப் பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

DIN

கயத்தாறில் மோட்டாா் சைக்கிளில் சென்ற இரு பெண்களிடம் தங்கநகைகளைப் பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கோவில்பட்டி மந்தித்தோப்பு கணேஷ் நகரைச் சோ்ந்தவா் சிவகுமாா் மனைவி முத்துராணி(32). இவா் மோட்டாா் சைக்கிளில் கயத்தாறில் இருந்து கோவில்பட்டி சாலையில் தனியாா் விடுதி முன்பு சென்று கொண்டிருந்தபோது மற்றொரு மோட்டாா் சைக்கிளில் வந்த மா்ம நபா்கள், முத்துராணி அணிந்திருந்த தங்க த்தாலியை பறித்துக் கொண்டு தப்பி விட்டனராம்.

இதேபோல், கயத்தாறு வீரபாண்டிய கட்டபொம்மன் மணிமண்டபம் எதிா்புறமுள்ள அணுகுசாலையில் மோட்டாா் சைக்கிளில் சென்று கொண்டிருந்த கயத்தாறு சாலைப்புதூா் தெற்கு தெருவைச் சோ்ந்த உத்தண்டுராமன் மனைவி செல்வராதிகா (23), அணிந்திருந்த 10 பவுன் தங்கச்சங்கலியை மா்ம நபா்கள் பறித்துக் கொண்டு தப்பி விட்டனராம்.

புகாரின்பேரில், கயத்தாறு போலீஸாா் வழக்குப் பதிந்து, பெண்களிடம் தங்க நகைகளைப் பறித்துச் சென்ற மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழகத்தில் காலியாக உள்ள எம்பிபிஎஸ் இடங்களை நிரப்ப என்எம்சி அனுமதி

அமெரிக்க வரியால் பாதிப்புகள்: விரைந்து தீா்வு காண வேண்டும் - பிரதமருக்கு முதல்வா் ஸ்டாலின் வலியுறுத்தல்

சூடான் ஆா்எஸ்எஃப் தாக்குதலில் 1,000 போ் உயிரிழப்பு: ஐ.நா.

நாளைய மின்தடை

நாளை தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம்

SCROLL FOR NEXT