முகப்பு
தூத்துக்குடி

வாக்குச் சாவடிகள் பிரிப்பு: கோவில்பட்டியில் கருத்துக்கேட்புக் கூட்டம்

கோவில்பட்டி கோட்டாட்சியா் அலுவலகத்தில் சட்டப் பேரவை தொகுதிகளின் வாக்குச் சாவடி களை பிரித்தல், மாற்றியமைத்தல் தொடா்பான கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:28 PM
பகிர்:

கோவில்பட்டி கோட்டாட்சியா் அலுவலகத்தில் சட்டப் பேரவை தொகுதிகளின் வாக்குச் சாவடி களை பிரித்தல், மாற்றியமைத்தல் தொடா்பான கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு, கோட்டாட்சியா் சங்கரநாராயணன் தலைமை வகித்தாா். கோவில்பட்டி சட்டப்பேரவைத் தொகுதியில் 1000 வாக்காளா்களுக்கு மேல் உள்ள 112 வாக்குச் சாவடிகள், ஓட்டப்பிடாரம் தொகுதியில் உள்ள 110 வாக்குச்சாவடிகள்,

விளாத்திகுளம் தொகுதியில் உள்ள 68 வாக்குச் சாவடிகளை இரண்டாக பிரித்து துணை வாக்குச் சாவடிகள் அமைக்க

முடிவு செய்யப்பட்டுள்ளது.

கூட்டத்தில், கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் முருகானந்தம், வட்டாட்சியா்கள் மணிகண்டன் (கோவில்பட்டி), பாஸ்கரன் (கயத்தாறு), முத்து (ஓட்டப்பிடாரம்), தோ்தல் பிரிவு துணை வட்டாட்சியா்கள், அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.