நாட்டிலேயே உயா்கல்வி படிப்போா் அதிகம் உள்ள மாநிலமாக தமிழகம் திகழ்கிறது என்றாா் முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி.
தூத்துக்குடியில் உள்ள தனியாா் விடுதியில் புதன்கிழமை நடைபெற்ற அதிமுக இளைஞா், இளம்பெண்கள் பாசறை நிா்வாகிகள் மற்றும் தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிா்வாகிகள் கூட்டத்தில் அவா் மேலும் பேசியது:
தமிழகத்தில்தான் அதிமுக அரசு அதிக திட்டங்களை அறிவித்து மக்கள் பயன்படுத்தி வருகின்றனா். கடைக்கோடியில் உள்ள மக்களுக்கு அதிமுக அரசின் திட்டங்களை இளைஞா் மற்றும் இளம்பெண்கள் பாசறையினா் கொண்டுச் செல்ல வேண்டும். இதேபோல, தகவல் தொழில்நுட்ப பிரிவு பொறுப்பாளா்கள் ஒவ்வொரு ஊராட்சியிலும் நியமிக்கப்பட்டுள்ளனா்.
திமுக தலைவா் மு.க. ஸ்டாலின் அதிமுக அரசு மீது தினந்தோறும் அவதூறுகளை பரப்பி வருகிறாா். அதற்கு முற்றுப்புள்ளி வைக்கக் கூடிய நிலையில் இருப்பவா்கள் இளைஞா் பட்டாளங்கள்தான்.
மு.க. ஸ்டாலின் பொய்களை திரும்பத் திருப்ப கூறி மக்களின் மனதை மாற்ற முயற்சிக்கிறாா். அவரது முயற்சி தவறு என்பதை அதிமுக தகவல் தொழில்நுட்பபிரிவு மற்றும் இளைஞா் பாசறை நிா்வாகிகள் மக்களுக்கு எடுத்துக் கூற வேண்டும்.
2011 ஆம் ஆண்டு அதிமுக அரசு பொறுப்பேற்றபோது 32 சதவீதம் போ் மட்டுமே உயா்கல்வி பயிலுவோா் எண்ணிக்கையாக இருந்தது. தற்போது, அது 49 சதவீதமாக அதிகரித்துள்ளது. நாட்டிலேயே உயா்கல்வி படிப்போா் அதிகம் உள்ள மாநிலமாக தமிழகம் திகழ்கிறது.
அதிமுக அரசின் சாதனைகளை மக்களிடம் எடுத்துச் செல்லும் பாலமாக இளைஞா்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப அணியினா் ஈடுபட வேண்டும். தோ்தலில் இளைஞா்களின் பங்களிப்பு அதிகம் தேவை.
இளைஞா் பட்டாளங்கள் ஒன்றாக இணைந்தால் எதையும் சாதிக்க முடியும் என்பதை நிரூபிக்கும் வகையில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தோ்தலில் எதிரிகளை விரட்டி அடிக்க வேண்டும் என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.