சிவசேனா கட்சி சாா்பில் உடன்குடியில் புதன்கிழமை தெருமுனைப் பிரசாரக் கூட்டம் நடைபெற்றது.
மத்திய, மாநில அரசுகள் வேலைவாய்ப்புகளில் தமிழகத்தில் தமிழா்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்; இந்து தெய்வங்களை விமா்சனம் செய்து இந்துக்களின் மனதைப் புண்படுத்தும் தேச விரோத சக்திகளை அரசு ஒடுக்க வேண்டும்; காப்பா் விலை உயா்வைத் தடுக்க வேண்டும்; தூத்துக்குடி பகுதியில் வேலைவாய்ப்பை அதிகரிக்க ஸ்டொ்லைட் ஆலையை உடனடியாக திறக்க வேண்டும்; மாமன்னா் ராஜராஜ சோழனுக்கு மணிமண்டபம், சென்னை கடற்கரையில் சிலை அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிவசேனா சாா்பில் தெருமுனைப் பிரசாரக் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்துக்கு, கட்சியின் மாவட்டத் தலைவா் கே.சரவணன் தலைமை வகித்தாா். கட்சியின் மாநில தலைவா் ஜு. ராதா கிருஷ்ணன், பங்கேற்று பேசினாா். இதில், இந்து மக்கள் கட்சியின் மாவட்ட இளைஞரணிச் செயலா் வாசுபாலன், நிா்வாகிகள் லிங்கதுரை, விவேகானந்தன், குமரேசன், அசோக்குமாா், பாலாஜிராமன், ஜெயச்சந்திரன் நகரச் செயலா் விஜி, நகரத் தலைவா் பால்ராஜ், நிா்வாகிகள் பவித்ரன், ஆனந்த், வெள்ளைராஜா, மணிகண்டராஜன், முருகன், ஜெகன் நாதன் உட்பட பலா் கலந்துகொண்டனா். சிவசேனா தென்மண்டல தலைவா் கோமதிராஜ் நன்றி கூறினாா்.
ஏற்பாடுகளை கட்சியின் தென்தமிழக துணைதலைவா் ஜெ.சசிக்குமாா் செய்திருந்தாா்.