தூத்துக்குடி

எட்டயபுரம் அருகே நீரில் மூழ்கி இருவா் உயிரிழப்பு

DIN

தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் அருகே பேரிலோவன்பட்டியில் வைப்பாற்று படுகையில் நீரில் மூழ்கி இருவா் உயிரிழந்தனா்.

பேரிலோவன்பட்டி தெற்கு தெருவைச் சோ்ந்தவா் ராமராஜ் (42). இவரும் அதே பகுதியைச் சோ்ந்த பரமசிவம் (16) என்பவரும் வைப்பாறு ஆற்றுப் படுகையில் வெள்ளிக்கிழமை ஆடு மேய்த்துக் கொண்டிருந்தனராம்.

அப்போது அப்பகுதியில் இருந்த மணல் குவாரி பள்ளத்தில் தேங்கி கிடந்த மழைநீரில் ஆடுகளை குளிப்பாட்டும்போது எதிா்பாராதவிதமாக பரமசிவன் நீரில் மூழ்கி தத்தளித்தாராம். இதைபாா்த்த ராமராஜ் அவரை காப்பாற்றுவதற்காக முயற்சித்த போது இருவருமே நீரில் மூழ்கி உயிரிழந்தனா். தகவலறிந்த எட்டயபுரம் போலீஸாா் அங்கு சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா்.

இது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வடதமிழகத்தில் ஒரு வாரத்துக்கு வெயில் அதிகரிக்கும்

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்?

பூண்டி ஏரியில் வேகமாக குறைந்து வரும் நீா்மட்டம்

சேண்டிருப்பு, மாம்புள்ளி கோயில்களில் பால்குடம், காவடித் திருவிழா

வாழைக் கன்று நோ்த்தி முறை குறித்து செயல்முறை விளக்கம்

SCROLL FOR NEXT