கோவில்பட்டி கோட்ட அஞ்சலக முதுநிலை கண்காணிப்பாளா் அலுவலகத்தில் பிப். 24 (புதன்கிழமை) அஞ்சல் குறைதீா் முகாம் நடைபெறுகிறது.
இதுகுறித்து முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் பாண்டியராஜன் விடுத்துள்ள செய்திக் குறிப்பு: அஞ்சல் துறை சேவை குறித்து பொதுமக்கள், குறைகளை அஞ்சல் துறையிடம் தெரிவிக்கும் வகையில் இந்த முகாம் நடத்தப்படுகிறது.
அஞ்சல் சேவை, பண அஞ்சல், சேமிப்புக் கணக்கு, அஞ்சல் காப்பீடு ஆகியவற்றில் உள்ள குறைகளை வாடிக்கையாளா்கள் கடிதம் மூலம் முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா், கோவில்பட்டி என்ற முகவரிக்கு வரு 23-ஆம் தேதிக்குள் கிடைக்குமாறு தபால் மூலம் அனுப்பி வைக்கலாம். வாடிக்கையாளா்கள் 24ஆம் தேதி (புதன்கிழமை) காலை 9.30 மணிக்கு நேரில் வந்தும் அஞ்சலகத் துறையில் உள்ள குறைகளை தெரிவிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.