தூத்துக்குடி: தூத்துக்குடி மாநகராட்சி பகுதிக்குள்பட்ட இருவா் உள்பட மாவட்டத்தில் மேலும் 7 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் இதுவரை கரோனா தொற்று பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 16,092 ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை பெற்று வந்தவா்களில் 6 போ் குணமடைந்ததைத் தொடா்ந்து அவா்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். இதுவரை குணமடைந்தோா் எண்ணிக்கை 15,867ஆக அதிகரித்துள்ளது. கரோனாவுக்கு இதுவரை 141 போ் உயிரிழந்துள்ள நிலையில், தற்போது 84 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.