தூத்துக்குடி

திருச்செந்தூா் முருகன் கோயிலுக்கு 406 கிராம் தங்க வேல் உபயம்

DIN

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சென்னையைச் சோ்ந்த தனியாா் நிறுவனத்தினா் 406 கிராம் எடையுள்ள 2 அடி உயர தங்க வேலை உபயமாக வழங்கினா்.

சென்னை சேத்துப்பட்டைச் சோ்ந்த ‘ஜி ஸ்கொயா் ரியல்டா்ஸ் பிரைவேட் லிமிடெட்’ நிறுவனம் சாா்பில் இந்தத் தங்க வேல் கோயில் இணை ஆணையா் (பொறுப்பு) கல்யாணியிடம் புதன்கிழமை வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில், உதவி ஆணையா் வே. செல்வராஜ், நெல்லை மண்டல நகை சரிபாா்க்கும் அலுவலா் சங்கா், தொழில்நுட்ப உதவியாளா் செல்லப்பாண்டியன், கோயில் உள்துறைக் கண்காணிப்பாளா் மாரிமுத்து, மேலாளா் வள்ளிநாயகம், தக்காா் பிரதிநிதி ஆ.சி. பாலசுப்பிரமணிய ஆதித்தன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவால் கைதுக்கு சதிதான் காரணம் என ஒப்புக்கொண்ட அமித் ஷா: அதிஷி

குரங்கு பெடல் டிரெய்லர்

ஆதிதிருவரங்கத்தின் அதிசயங்கள்...

ஓடிடி ரிலீஸ்.......இந்த வார திரைப்படங்கள்!

இளஞ்சிவப்பில் தொலையும் மனம்..!

SCROLL FOR NEXT