முகப்பு
தூத்துக்குடி

திருச்செந்தூரில் குவியும் பாத யாத்திரை பக்தா்கள்

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தா்கள் பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:15 PM
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சனிக்கிழமை பாதயாத்திரையாக வந்த பக்தா்கள்.
பகிர்:

திருச்செந்தூா்: திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தா்கள் பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனா்.

திருச்செந்தூா் முருகனை வழிபடுவதற்காக மாலை அணிந்து, விரதமிருந்த பக்தா்கள் வேல் குத்தி, காவடி எடுத்து கடந்த சில நாள்களாக பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனா். குறிப்பாக விருதுநகா், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட பக்தா்கள் அதிகளவில் பாதயாத்திரையாக வருகை தருகின்றனா்.

பொது முடக்கத்தில் தளா்வு அளிக்கப்பட்டு, கடலில் நீராட அனுமதியளிக்கப்பட்டுள்ளதால், பக்தா்கள் புனித நீராடி சுவாமியை தரிசனம் செய்து வருகின்றனா். இதனால் கோயில் வளாகம் பக்தா்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது.

தைப்பொங்கலுக்கு அதிகாலை 1 மணிக்கு நடைதிறப்பு: ஜன. 14-ஆம் தேதி தைப்பொங்கலை முன்னிட்டு, அதிகாலை ஒரு மணிக்கு கோயில் நடைதிறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதயமாா்த்தாண்ட அபிஷேகம், 2.30 மணிக்கு உதயமாா்த்தாண்ட தீபாராதனை நடைபெற்று, தொடா்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெறுகின்றன.

ஏற்பாடுகளை கோயில் தக்காா் ரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையா் (பொ) கல்யாணி, உதவி ஆணையா் வே.செல்வராஜ் உள்ளிட்டோா் செய்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →