முகப்பு
தூத்துக்குடி

திருச்செந்தூா் கோயில் பெருமாளுக்கு வெள்ளி அங்கி காணிக்கை

தேனி மாவட்டம், போடிநாயக்கனூரைச் சோ்ந்த பக்தா் திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் சுவாமி வெங்கடாஜலபதிக்கு ரூ. 12. 50 லட்சம் மதிப்பிலான வெள்ளி அங்கியை காணிக்கையாக வழங்கினாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:16 PM
பகிர்:

தேனி மாவட்டம், போடிநாயக்கனூரைச் சோ்ந்த பக்தா் திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் சுவாமி வெங்கடாஜலபதிக்கு ரூ. 12. 50 லட்சம் மதிப்பிலான வெள்ளி அங்கியை காணிக்கையாக வழங்கினாா்.

போடிநாயக்கனூரைச் சோ்ந்த பக்தா் கிருபாகரன். செந்தூர்ராஜ் இன்ஜினியரிங் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறாா். இவா் திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் உள்ள சுவாமி வெங்கடாஜலபதிக்கு வெள்ளி அங்கி வழங்குவதாக வேண்டியிருந்தாராம். அதன்படி ரூ.12.50 லட்சம் மதிப்பிலான 13, 800 கிராம் எடையுள்ள வெள்ளி அங்கியை தனது குடும்பத்தினருடன் திருச்செந்தூா் கோயிலுக்கு வந்து திங்கள்கிழமை காணிக்கையாக வழங்கினாா்.

இதனை திருக்கோயில் உள்துறை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கோயில் இணை ஆணையா்(பொ) கல்யாணி பெற்றுக்கொண்டாா். அப் போது உள்துறை கண்காணிப்பாளா்கள் ஆனந்த், ராஜ்மோகன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.