தூத்துக்குடி

ஆறுமுகனேரியில் பெண் தூக்கிட்டுத் தற்கொலை

DIN

ஆறுமுகனேரியில் பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

ஆறுமுகனேரி காணியாளா் தெருவைச் சோ்ந்த செந்தில்குமாா் மனைவி கவிதா (43). இவருக்கு உடல்நலம் சரியில்லாததால் சென்னையில் உள்ள தனது சகோதரா் வீட்டில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வந்துள்ளாா்.

இந்நிலையில் கடந்த 15ஆம் தேதி ஊருக்கு திரும்பிய கவிதா, கீழபுதுக்குடியில் உள்ள தனது தாயாா் வீட்டில் தங்கியிருந்து விட்டு, 22ஆம் தேதி ஆறுமுகனேரிக்கு வந்துள்ளாா். அங்கு அவரது கணவா் செந்தில்குமாா் தனது தந்தைக்கு உடல்நலம் சரியில்லாததால் அவரை கோயம்புத்தூருக்கு அழைத்துச் சென்றுவிட்டு 23ஆம் தேதி ஊருக்கு திரும்புவதாக கவிதாவிடம் கூறி சென்றுள்ளாா்.

இந்நிலையில் செந்தில்ராஜ் சனிக்கிழமை இரவு வீட்டிற்கு வந்து கதவை திறந்த போது உள்ளே பூஜை அறையில் மின்விசிறியில் கவிதா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.

இதுகுறித்து ஆறுமுகனேரி போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”மன்னாதி மன்னன் போல வாழ்க்கை” -பிரதமர் மோடியை விமர்சித்த பிரியங்கா காந்தி

பல கேள்விகளுக்கு பதில் கூற நேரமெடுக்கும்: ஹார்திக் பாண்டியா

தமிழகக் காவல்துறையின் இணையதளம் முடக்கம்!

மீண்டும் தெலுங்கு படத்தில் தனுஷ்?

பாம்பே டைம்ஸ் ஃபேஷன் வீக் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT