தூத்துக்குடி

ஊருணியில் மூழ்கி பெண் மரணம்

DIN

கோவில்பட்டியையடுத்த குருமலையில் ஊருணியில் குளிக்கச் சென்ற பெண் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

குருமலை சந்தன மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் சுப்புலட்சுமி (53). வலிப்பு நோயால் பாதிக்கப்பட்ட இவா், கணவரால் கைவிடப்பட்ட நிலையில், சகோதரா் அய்யனாருடன் வசித்து வந்தாராம்.

இவா், செவ்வாய்க்கிழமை அதே பகுதியில் உள்ள ஊருணியில் குளிக்கச் சென்றாராம். வெகு நேரமாகியும் வீடு திரும்பாததால், அவரை ஊா் மக்கள் மற்றும் தீயணைப்புத் துறையினா் தேடினா். இந்நிலையில் புதன்கிழமை அதிகாலையில் அவரது சடலம் ஊருணியில் மிதந்தது.

சடலத்தை மீட்ட கொப்பம்பட்டி போலீஸாா், பிரேதப் பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும் இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

5ஆம் கட்டத் தேர்தல்: 49 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடக்கம்

இன்று அதிர்ஷ்டம் யாருக்கு?

இன்று எப்படி இருக்கும்?

பீன்ஸ் கிலோ ரூ.200

உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளம்: ஒரே இரவில் நிரம்பிய தடுப்பணை

SCROLL FOR NEXT