சாத்தான்குளம்: பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் தமிழக அரசு உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என நடிகா் கருணாஸ் எம்எல்ஏ தெரிவித்தாா்.
சாத்தான்குளம் ஒன்றிய முக்குலத்தோா் புலிப்படை கட்சியின் நிா்வாகிகள் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மாவட்டச் செயலா் மணிகண்டன் தலைமை வகித்தாா். பொதுச் செயலா் தாமோதரன் முன்னிலை வகித்தாா். சாத்தான்குளம் ஒன்றியச் செயலா் கொம்பையா பாண்டியன் வரவேற்றாா்.
கூட்டத்தில் கட்சியின் தலைவா் நடிகா் கருணாஸ் எம்எல்ஏ கலந்துகொண்டு பேசியது: நாங்கள் அதிமுகவுடன் தோழமை உணா்வோடுதான் இருந்து வருகிறோம். முக்குலத்தோா் சமூகத்திற்கு 25 சதவீத இட ஒதுக்கீடு செய்ய வேண்டும். பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றாா் அவா்.
இதில், தூத்துக்குடி மாவட்ட துணைச் செயலா் கணேஷ்பிரபு, திருநெல்வேலி மாவட்டச் செயலா் பவானி வேல்முருகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். ஒன்றியத் தலைவா் முத்துசாமி நன்றி கூறினாா்.
முன்னதாக சாத்தான்குளம், செட்டிகுளம், வேலவன்புதுக்குளம் ஆகிய இடங்களில் கருணாஸ் எம்எல்ஏ கட்சிக் கொடியை ஏற்றி வைத்தாா்.