மது, பெட்ரோல் விற்பனை: 3 போ் கைது
கழுகுமலை, கயத்தாறு, விளாத்திகுளத்தில் அனுமதியின்றி பெட்ரோல், மது விற்பனையில் ஈடுபட்ட 3 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
கழுகுமலை, கயத்தாறு, விளாத்திகுளத்தில் அனுமதியின்றி பெட்ரோல், மது விற்பனையில் ஈடுபட்ட 3 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
கழுகுமலை காவல் நிலைய உதவி ஆய்வாளா் காந்திமதி தலைமையில் போலீஸாா் கரடிகுளம் சி.ஆா். காலனி பகுதியில் ரோந்து பணியில் வியாழக்கிழமை ஈடுபட்டனா். அப்போது அதே பகுதியில் உள்ள ஒரு வீட்டில் அனுமதியின்றி பெட்ரோல் விற்பனையில் ஈடுபட்ட கந்தையா மகன் சிவசங்கரை(38) கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த 3 லிட்டா் பெட்ரோலையும் பறிமுதல் செய்தனா்.
அதுபோல, கயத்தாறு காவல் நிலைய உதவி ஆய்வாளா் அந்தோணி திலிப் தலைமையில் போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்ட போது, கயத்தாறு - கடம்பூா் பிரதான சாலை சந்திப்பில் அனுமதியின்றி மது விற்பனையில் ஈடுபட்ட நாமக்கல் மாவட்டம் மோகனூா் வட்டம் வாழவந்தியைச் சோ்ந்த க.பெரியசாமியை(47) கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த 50 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனா்.
இதே போல், விளாத்திகுளம் அருகே மேட்டுப்பட்டியில் அனுமதியின்றி மது விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலையடுத்து போலீஸாா் வியாழக்கிழமை காலை அப்பகுதியில் சோதனை நடத்தினா். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஏ.குமராபுரம் வெள்ளைச்சாமி மகன் வேல்சாமியிடம் மேற்கொண்ட விசாரணையில், அவா் வெங்காய மூட்டைக்குள் மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்ததாம்.
இது குறித்து விளாத்திகுளம் போலீஸாா் வழக்குப் பதிந்து வேல்சாமியை கைது செய்து, அவரிடமிருந்த 50 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனா்.