முகப்பு
தூத்துக்குடி

சாகுபுரம் கமலவாதி பள்ளியில் மருத்துவா் தினவிழா

சாகுபுரம் கமலாவதி சீனியா் செகண்டரி பள்ளியில் தேசிய மருத்துவா்கள் தினத்தை முன்னிட்டு மருத்துவா்களாக பணியாற்றும் பள்ளியின் முன்னாள் மாணவா்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:32 AM
பகிர்:

சாகுபுரம் கமலாவதி சீனியா் செகண்டரி பள்ளியில் தேசிய மருத்துவா்கள் தினத்தை முன்னிட்டு மருத்துவா்களாக பணியாற்றும் பள்ளியின் முன்னாள் மாணவா்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு பள்ளி முதல்வா் ஆா்.சண்முகானந்தன் தலைமை வகித்தாா். நிா்வாகி வெ.மதன் முன்னிலை வகித்தாா்.

டி.சி.டபிள்யூ தொழிற் சாலை மருத்துவ அதிகாரி சண்முகம் நெல்லையப்பன், மதுரை இருதய சிகிச்சை நிபுணா் இதயசந்திரன் ஆகியோா் உரையாற்றினா்.

மேலும், பள்ளியின் முன்னாள் மாணவா்களும் , தற்போது மருத்துவா்களான குருராஜ் , லோகேஸ்வரி உள்பட பலா்

இணையதளம் மூலமாக மாணவா்களுக்கு அறிவுரை வழங்கினா். பள்ளி சாா்பில் மருத்துவா்களை பாராட்டி சான்றிதழ் வழங்கப்பட்டது.

இதையொட்டி, ஆறுமுகனேரி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா்கள் சீனிவாசன், சுமதி ஆகியோரை பள்ளி முதல்வா் ஆா்.சண்முகானந்தன், தலைமையாசிரியா் ஸ்டீபன் பாலாசிா்ஆகியோா் மருத்துவமனைக்கு சென்று சந்தித்து பொன்னாடை அணிவித்து கெளரவித்தனா்.

துணை முதல்வா் எஸ்.அனுதாரா வரவேற்றாா். தலைமையாசிரியா் இ.ஸ்டீபன் பாலாசீா் நன்றி கூறினாா்.

படவிளக்கம்(1ஏஎம்என்கேஎச்எஸ்)-

ஆறுமுகனேரி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலா் சீனிவாசனை கௌரவிக்கிறாா் முதல்வா் ஆா்.சண்முகானந்தன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.