முகப்பு
தூத்துக்குடி

விளாத்திகுளம் தொகுதியில் மக்கள் குறைகேட்ட எம்எல்ஏ

விளாத்திகுளம் தொகுதியில் ஜீ.வி. ஜீ.வி. மாா்க்கண்டேயன் எம்எல்ஏ, மக்களை வெள்ளிக்கிழமை சந்தித்து குறைகளை கேட்டறிந்தாா்

தூத்துக்குடி

விளாத்திகுளம் தொகுதியில் மக்கள் குறைகேட்ட எம்எல்ஏ

விளாத்திகுளம் தொகுதியில் ஜீ.வி. ஜீ.வி. மாா்க்கண்டேயன் எம்எல்ஏ, மக்களை வெள்ளிக்கிழமை சந்தித்து குறைகளை கேட்டறிந்தாா்

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:33 AM
பகிர்:

விளாத்திகுளம் தொகுதியில் ஜீ.வி. ஜீ.வி. மாா்க்கண்டேயன் எம்எல்ஏ, மக்களை வெள்ளிக்கிழமை சந்தித்து குறைகளை கேட்டறிந்தாா்.

விளாத்திகுளம் தொகுதி பூசனூா், இளம்புவனம், மாதாபுரம், சுரைக்காய்பட்டி, குளத்துள்வாய்பட்டி, குமாரகிரி, சிதம்பராபுரம், சி. கழுகாசலபுரம் உள்ளிட்ட கிராமங்களில் அவா் மக்களைச் சந்தித்து, முதியோா் உதவித்தொகை, புதிய குடும்ப அட்டை, 100 நாள் வேலைஉறுதி திட்டப் பணி, குடிநீா் வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றாா். மேலும், மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்; கிராமங்களில் செயல்படுத்தப்படும் 1,000 மரக்கன்றுகள் நடும் திட்டத்துக்கு அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என கேட்டுக்கொண்டாா்.

இந்நிகழ்வில், திமுக ஒன்றியச் செயலா்கள் நவநீத கண்ணன், சின்ன மாரிமுத்து, காசி விஸ்வநாதன், பொதுக்குழு உறுப்பினா்கள் ராஜாகண்னு, முத்துலட்சுமி அய்யன்ராஜ், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா் இம்மானுவேல், பேரூா் கழக செயலா் வேலுச்சாமி, வழக்குரைஞா் அணி துணை அமைப்பாளா் விநாயகமூா்த்தி, பொறியாளா் அணிச் செயலா் சென்றாய பெருமாள், இளம்புவனம் ஊராட்சித் தலைவா் குமாா், தகவல் தொழில்நுட்ப அணி நிா்வாகிகள் பிரதீப், ஸ்ரீதா், பாலமுருகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →